search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூட்டை உடைத்து கொள்ளை"

    • கேமரா காட்சிகள் மூலம் விசாரணை
    • தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்

    ஆற்காடு:

    ஆற்காடு தொல்காப்பியர் தெருவில் ஜெயித்தமால்சிங் (வயது 30) என்பவர் 5 ஆண்டு களாக செல்போன் மற்றும் அதற்கான உதிரி பாகங் கள் விற்னை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் கடையை திறந்து வியாபாரம் முடித்து கொண்டு இரவு கடையை பூட்டி விட்டுச் சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    கடையில் வைத்திருந்த ரூ.16 ஆயிரம், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 20 செல்போன்கள் உள்ளிட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர்.

    இது குறித்து ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி

    அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர்.

    அதில் மர்ம நபரின் முகம் பதிவாகி இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் தனி படைகள் அமைக்க ப்பட்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    • வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வருகிறார்.
    • இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 42). வெள்ளித் தொழிலாளி.

    இவர் சேலம் சிவதாபுரத்தில் உள்ள ஒரு வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டிவிட்டு சென்றார். இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்து ரூ.3 லட்சம் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மூர்த்தி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • கடந்த 4-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார்.
    • வீட்டிற்குள் பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரம் பணம், 2½ பவுன் தங்க நகைகள் கொள்ளை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் லட்சுமி நகர் 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் தாேமாதரன் (வயது42). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரம் பணம், 2½ பவுன் தங்க நகை உள்பட 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளது தெரியவந்தது.

    இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10 பவுன் நகை, பணம் திருடி சென்றனர்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமம் ரோடு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அருகில் உள்ள நட்சத்திர கோவில் அருகில் சைக்கிள் ஷாப் நடத்தி வருகிறார்.

    திருட்டு

    இவர் நேற்று குடும்பத்துடன் வீட்டை பூட்டிக்கொண்டு திருவண்ணாமலைக்கு துணி எடுப்பதற்காக சென்றுள்ளார்.

    மீண்டும் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கேட் பூட்டப்பட்டு இருந்த நிலையில் வீட்டில் பக்கவாட்டில் உள்ள மாடி படியின் வழியாக உள்ளே வந்து மற்றொரு கேட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளதாக கலசப்பாக்கம் போலீசில் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.

    விசாரணை

    இதன் பேரில் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டம் பகலிலேயே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 3 பவுன் நகையை திருடி சென்றனர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் அமர்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி.

    இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஈஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

    பின்னர் நேற்று சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு வந்தார். வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகையை மர்ம கும்பல் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×